தனியார் நிதி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் விதிகளை மீறி தவணையை பிடித்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தனியார் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் தனிநபர் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்டவை வழங்கி, வாடிக்கையாளர்களிடம் மாதத் தவணையில் கடன் தொகையை வசூலித்து வருகிறது.
இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் கடந்த 5ம் தேதி தவணையை பிடித்தம் செய்த நிறுவனம், மீண்டும் முன்னறிவிப்பின்றி தொகையை பிடித்தம் செய்துள்ளது.
இதனையறிந்த வாடிக்கையாளர்கள் சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பினர்.
அப்போது பதிலளித்த அதிகாரிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவ்வாறு நடந்ததாகவும், கோளாறை சரிசெய்யும் பணியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
















