கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படையினர், ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் அவர்கள் தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவிடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர்.
சாலை பாதுகாப்பு குறித்தும், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விமானப்படை அதிகாரிகள் 17 பேர், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
















