தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே ஏரிகளில் இரவு பகலாக கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான நாகனம்பட்டி, முக்குலம், பந்தாரஹள்ளி, பெரியம்பட்டி, புலிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மலைகள், ஏரிகள் உள்ளன.
இப்பகுதியில் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு இரவு பகலாக டிராக்டர் மற்றும் கர்நாடக எண்கள் கொண்ட டிப்பர் லாரிகளில் கனிம வள கொள்ளை நடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய கவனம் செலுத்தி இயற்கை வள கொள்ளையை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















