திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தவசிமேடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 27 பேர் காயமடைந்தனர்.
நத்தம் அருகே தவசிமேடையில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
இதில் 750 காளைகளும், 269 வீரர்களும் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.
காலை 8 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, வெள்ளிக்காசு, கட்டில், மெத்தை, டிவி, ரொக்கப் பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியின்போது காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 27 பேர் காயமடைந்தனர்.
















