ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அடையாள அட்டை முதல் முகவரி ஆதாரம் வரை பரவலாக தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் அட்டை பயன்பட்டுவருகிறது.
கடன், பாஸ்போர்ட், பேன் என எது வாங்குவதாக இருந்தாலும் ஆதார் அட்டை எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது.
இதுவரை வழங்கப்பட்டு வந்த ஆதார் அட்டையில், ஆதார் எண், விலாசம் ஆகியவை அச்சிடப்பட்டு இருந்தது.
இதனை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இனிமேல் வழங்கப்படும் ஆதார் அட்டைகளில் புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு மட்டுமே வெளியே தெரியும் வகையில் அச்சிட UIDAI முடிவு செய்துள்ளது.
















