சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
மத்தியக் கல்வி பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் முதல்வாரம் வரை நடைபெறுகிறது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் இந்த தேர்வை லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று கணித பாடமும், 21ஆம் தேதி ஆங்கிலமும், 25ஆம் தேதி அறிவியலும், மார்ச் 2ஆம் தேதி இந்தி மற்றும் மார்ச் 7ஆம் தேதி சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று உடற்கல்வி தேர்வும், வரும் 20ஆம் தேதி இயற்பியல், 28ஆம் தேதி வேதியியல், மார்ச் 9ஆம் தேதி கணித பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
















