ஆன்மிகமும், தியானமுமே நமது தேசத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பாசமுத்திரம் யோகிஸ் தியான மையத்தின் நிறுவனர் யோகிஸ் ராஜா எழுதிய “சிவ ரகசியம்” நூல் வெளியீட்டு விழா, நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசியபோது, மனம் ஒருமுகப்படவில்லை என்பது எல்லா மதத்தினருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை என்று குறிப்பிட்ட அவர், தியானமே இவை அனைத்திற்கும் ஒரு பொதுவான தீர்வு என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமகால சமுதாய மாற்றங்கள் குறித்து வேதனை தெரிவித்த அவர், பாரத சமுதாயத்தின் அடிப்படை என்பது குடும்பம் தான் என்றும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையும், ஒழுக்கமும் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
















