திருப்பத்தூரில் ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை மாவட்ட பறவையாக அறிவிக்கப்பட்டது.

தூய நெஞ்சக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு மாவட்ட பறவை குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.
25 நாட்களாக பொதுமக்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் “இந்திய சாம்பல் நிற இருவாச்சி” முதலிடத்தைப் பெற்றது.
இதனை மாவட்ட பறவையாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
















