தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக, முக்கிய அடையாளமாக விளங்கிய பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றப்பட்டு வருகிறது.
சமீப காலமாக குற்றாலம் மெயின் அருவியில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த பாதுகாப்பு வளைவை அகற்றி புதிதாக பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட உள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் 11 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. குளிப்பதற்கு அதிக இட வசதியும், அருவிக்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறையும் புதிதாக கட்டப்பட உள்ளன. இது தவிர, அருவிக்குச் செல்லும் பாதைகளும், வாகன நிறுத்துமிடமும் சீரமைக்கப்பட உள்ளன.
















