பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யாவை பெங்களூருவில் போலீசார் கைது செய்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்து வந்த மதூர் சத்யா, பல பெண்களுக்கு சமூகவலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள், ஈமெயில் மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மதூர் சத்யா மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யாவை போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
















