பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளதாக நேபாள பிரதமர் பாலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நேபாள பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
இதற்கு பாலேந்திர ஷா தனது சமூக வலைதளத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், மக்களின் வளர்ச்சிக்காகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், பிரதமர் மோடிடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
















