ஈரான் உடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதி ராண்டி ஜார்ஜ் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அணு ஆயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்துள்ளன. போர் தீவிரமடைந்து நிலையில், அமெரிக்க ராணுவ தளபதி ராண்டி ஜார்ஜை திடீரென பதவி நீக்கம் செய்து, பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ராண்டி ஜார்ஜ் உடனடியாக ஓய்வு பெறுமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுட்டுள்ளது. இதனிடையே துணைத் தளபதியாக இருக்கும் ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் தற்காலிக ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2023ம் ஆண்டு ஜோ பைடன் அரசால் ராண்டி ஜார்ஜ், ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
















