சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என செல்வப் பெருந்தகை தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தனி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாநில தலைவர் செல்வபெருந்தகை மாங்காட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக வேறு யாராவது வேலை செய்வார் எனவும் தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பணி செய்து வருவேன் எனவும் கூறினார். 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.
















