ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 73 ரன்களையும், ஷிவம் துபே 45 ரன்களையும், சர்ப்ராஸ் கான் 32 ரன்களையும் குவித்தனர்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றிபெற்றது.
















