ஒரு தொகுதிக்கு மேல் தரமாட்டோம் என கூறி உதாசீனப்படுத்திய திமுகவுக்கு தமிழக வாழ்ரிமை கட்சியினர் தக்க பாடம் புகட்ட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், பேரவைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி 234 இடங்களிலும் தனித்து போட்டியிடும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு தொகுதிக்காக பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக, தனித்து போட்டியிட்டு மடிவதே மேல் என தெரிவித்தார்.
















