கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளரான தளவாய் சுந்தரம், மக்களுடன் அமர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் குறித்து விளக்கிப் பேசி, வாக்கு சேகரித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரான தளவாய் சுந்தரம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தளவாய் சுந்தரம் இரட்டை இலை சின்னத்திற்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பஞ்சலிங்கபுரம், மகாராஜபுரம் பகுதியில் வாக்காளர்களுடன் அமர்ந்து அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தளவாய் சுந்தரம் விளக்கிப் பேசினார்.
















