5000 ஆண்டுகள் பழமையானது தனித்துவமானது : இமாச்சலின் பாரம்பரியத்தை பறைசாற்றும் திருவிழா!
Jan 14, 2026, 12:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

5000 ஆண்டுகள் பழமையானது தனித்துவமானது : இமாச்சலின் பாரம்பரியத்தை பறைசாற்றும் திருவிழா!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சல பிரதேசத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் 5000 ஆண்டுகள் பழமையான குளிர்கால திருவிழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமிக்க திருவிழா கொண்டாடப்பட காரணம் என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.

சில மரபுகள், சில திருவிழாக்கள், சில அடையாளங்கள் வழி வழியாக நாம் கடைபிடித்து வந்த பண்பாடு, கலாச்சாரத்தை மனதிற்குள் இதமாக நுழைத்து அதன் தொன்மையை உணர வைத்துவிடுகின்றன… இப்போது நீங்கள் பார்ப்பது மரபுகளை உள்ளே மறைத்திருக்கும் பாரம்பரியமிக்க ரௌலானே என்ற பழமையான உயிரோட்டமுள்ள ஒரு சடங்கைத்தான்… இதனை தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் கிராமங்கள் கூட, அது எங்கிருந்து தொடங்கியது என்று கூற முடியவில்லை.

வானுயர்ந்து நிற்கும் இமாச்சல பிரதேசத்தின் மலைகளின் நிழல்களைத் தாங்கி நிற்கும் பள்ளத்தாக்குகளில் ரெளலானே என்பது இந்தப் பூமி விட்டுவிட மறுக்கும் ஒரு அற்புதமான நினைவலைகள் காற்றோடு காற்றாக ஒரு நினைவாகக் கலந்து நிற்கிறது. ஒவ்வொரு ஆண்டும், புல்வெளிகளில் மேல் படிந்துள்ள பனியின் சுமையை சூரியன் உறிஞ்சும் காலத்தில், இமாச்சல பிரதேசத்தின் உள்ள கல்பா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ரௌலானே திருவிழாவுக்காக ஒன்று கூடுகிறார்கள்.

5000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் இந்தத் திருவிழா, பெரும்பாலான மதங்களை விடப் பழமையானது, சுவடிகளில் எழுதப்பட்ட கலாச்சாரத்தை விட தொன்மையானது, நவீன இந்தியாவை விட மிகமிக பழமையானது… அர்த்தமுள்ள இந்த திருவிழாவின் வயதை உள்ளூர் மக்கள் அறிந்திருக்காவிட்டாலும், உணர்வுபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்… திருவிழாவில் பாடப்படும் பழமையான பாடல், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டுள்ளது, அதற்கு யார் இசையமைத்தார்கள் என்று தெரியவில்லை என்றாலும், அங்கிருக்கும் கிராம மக்களுக்கு அது பரிச்சயமானது, அவர்களது ரத்தத்தில், எலும்புகளில் பதிந்துள்ளது… ப்ரீத்.. வரலாற்றை விட பழமையான ஒரு பண்டிகையான, திருவிழாவான ரௌலேனுக்கு எந்த மூலக்கதையும் இல்லை.

புராணமும், வழக்கமும் தனித்தனியாக இல்லாத ஒரு காலத்திற்கு ரௌலானே சொந்தமானது என்றும், அப்போது பிரார்த்தனை என்பது நடனமாகவும், அந்த நடனம் வானத்திற்கு ஒரு செய்தியை கூறும் ஒரு கருவியாகவும் இருந்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்… எனினும், நீண்ட குளிர்காலத்தில் கின்னாரின் புல்வெளி பகுதிகளான கந்தாவை கண்காணிக்கும் சௌனி, அதாவது மலை தேவதை அல்லது பாதுகாவலர் ஆவிகளுக்குப் பிரசாதத்தை அளிக்கும் சடங்காக ரௌலானே தொடங்கியது என்பது நீடித்த நம்பிக்கையாக உள்ளது.

மந்தைகளை பாதுகாப்பது, திடீர் மூடுபனியில் தொலையும் பயணிகளை வழிநடத்துவது, கடுமையான குளிர்காலத்தை மென்மையாக மாற்றுவது எனச் சௌனியின் இருப்பை கிராம மக்கள் விவரிக்கிறார்கள்… மலை தேவதைக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் பூக்களையும், பால் மற்றும் கைகளால் செய்யப்பட்ட ஆபரணங்களையும் வழங்கினர். தலைமுறை தலைமுறையாக அந்த, அமைதியான செயல், இன்றும் நாம் காணும் சடங்காக விரிவடைந்து நிற்கிறது. ப்ரீத்.. ரௌலா மற்றும் ரௌலேன் இருவரும் ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும், குழுவில் இருந்தும் சமூக பெரியவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ரௌலானே பண்டிகையின்போது பாரம்பரிய உடையை தரிக்கிறார்கள்… கம்பளி டோரி, பட்டி, கைகளால் நெய்யப்பட்ட கச்சோ மற்றும் மூதாதையர்களின் ஆபரணங்களை அணிந்து பழமையான நாகரிகத்துக்கு நம்மையெல்லாம் அழைத்துச் செல்கிறார்கள். அந்த சடங்கின்போது இரு ஆண்கள், ரௌலா, ரௌலானே என ஜோடியாக இணைந்து நடிக்கிறார்கள், ரெளலா தனது முகத்தில் சிவப்பு துணியை சுற்றிக்கொள்ள, ரௌலேன் உள்ளூரின் புனித மலர்களான சாம்கா, நர்காசாங், பத்ரியில் இருந்து வடிவமைக்கப்பட்ட விரிவான மலர் கிரீடத்தை அணிந்து கொள்கிறார்கள். கையுறைகள் அவர்களின் தோலை மறைக்கவும், முகமூடிகள் அவர்களின் தனித்துவத்தை அழிக்கின்றன.

காரணம் ஒரு மனித முகம் அந்தச் சடங்கை மிகச் சாதாரணமாகக் காட்டும் அதே நேரத்தில் முகமூடி அணிந்த உருவம், ஒரு பாத்திரமாக மாறுகிறது என்பதாலும் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. இது திருமணமாக அல்லாமல், பக்தி மற்றும் ஆன்மிக உலக வழிகாட்டுதலின் கலவையாகப் பார்க்கப்படுகிறது. ஆண்மை மற்றும் பெண்மை ஆகியவற்றின் ஒன்றிணைப்பை பிரதிபலிக்கிறது.

தொடர்ச்சியாக நடக்கும் ஊர்வலத்தில், டிரம்ஸ் இசையானது இதயத்துடிப்பை எகிற வைக்கிறது, கோயில் மணிகளின் ஓசை, பாரம்பரிய சால்வைகளின் சலசலப்பு போன்றவை காற்றை அடர்த்தியாக மாற்றுகிறது. ஊர்வலத்தை வழிநடத்தும் ஜான்புண்டுலு, அதாவது கொடூரமான முகமூடி அணிந்த மனிதர்கள் முன்னோக்கி செல்வது, தீய எண்ணம் கொண்ட ஆவிகளை விரட்டுகிறார்கள் என்று நம்பப்படுகிறது. குழந்தைகள் அவர்களை அகன்ற கண்களால் பார்க்கிறார்கள்.

அவர்கள் கடந்து செல்லும்போது பெரியவர்கள் தலையை லேசாகக் குனிந்து கொள்கிறார்கள். இறுதியாக நாகின் நாராயண் கோயிலில் அந்த ஊர்வலம் நிறைவடைகிறது. வெளியாட்களுக்கு, ரௌலேன் என்பது உடை, நடனம் மற்றும் காட்சி ஆகியவற்றின் கலவையாகத் தோன்றலாம். உள்ளூர்வாசிகளுக்கு, இது ஒரு நிகழ்ச்சி அல்ல. அது உயிரோட்டமுள்ள ஒரு நிகழ்வாகக் காலம் உள்ளவரைக் கடைபிடிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

Tags: Himalayasஇமாச்சல பிரதேசம்5000 years old is unique: A festival that showcases the heritage of Himachal
ShareTweetSendShare
Previous Post

வான் அசுரன் Apache ஹெலிகாப்டர்கள் : எல்லையில் நிறுத்தும் இந்தியா – மிரட்சியில் சீனா, பாகிஸ்தான்!

Next Post

கோவை, மதுரைக்கு 2026 ஜூன் மாதம் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் – நயினார் நாகேந்திரன்

Related News

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies