Ministry of Ports - Tamil Janam TV

Tag: Ministry of Ports

தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணலை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

துறைமுகங்கள், கப்பல், நீர்வழிகள் துறை அமைச்சகம் கடல் முகத்துவாரத்தில் தூர்வாரப்படும்போது கிடைக்கும்  மணல்களை மதிப்பிடுவதற்கான ஆராய்ச்சி முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.46,47,380/-மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்தத் திட்டம் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தால் (ஐஐடி பம்பாய்) மூன்று ஆண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். தூர்வாரப்பட்ட மணலை பல்வேறு கட்டுமானங்களுக்குப் பொருத்தமானதாக மாற்றுவதே இந்த ஆராய்ச்சியின் முதன்மை நோக்கம்  ஆகும்.  இந்த புதுமையான அணுகுமுறை பொதுவாக கழிவுகளாகக் காணப்படும் தூர்வாரப்பட்ட மணலை மதிப்புமிக்க வளமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் பங்களிக்கும். கப்பல் துறை கூடுதல் ...