தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோ உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களைச் (எஸ்.எஸ்.எல்.வி) செலுத்துவதற்தாக இந்த விண்வெளி தளம் இருக்கும் என்று அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
விண்வெளி பொருளாதாரத்தின் முழு மதிப்புத் தொடரிலும், அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.இ) மேம்பட்டப் பங்கேற்புக்காக இந்திய விண்வெளி கொள்கை – 2023 இன் படி,இந்தத் துறையைத் திறக்கிறது என மாநிலங்களவையில் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
“விண்வெளி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அங்கீகாரம் அளிப்பதற்கும் ஒற்றைச் சாளர நிறுவனமாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை (ஐ.என்-எஸ்.பி.ஏ.சி) மத்திய அரசு அமைத்துள்ளது. இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள்:
2021-22 ரூ.10 கோடி
2022-23 ரூ. 33 கோடி
2023-24 ரூ.95 கோடி
லிகோ-இந்தியா திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.2600 கோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது அணுசக்தித் துறையை முகமையாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் முடிந்ததும், ஈர்ப்பு அலைகளைக் கண்டறிவதற்கும் வானியல் தொடர்பான துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்கும் லிகோ-இந்தியா ஒரு தேசிய வசதியாக இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
சந்திரயான் -3 விண்கலம் 14 ஜூலை 2023 அன்று சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 14:35 மணிக்கு எல்.வி.எம் -3 மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது பற்றியும் அதன் தற்போதைய நிலை பற்றியும் கூறினார்.