அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!
Aug 18, 2026, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!

லைஹானா சுற்றுலா நகரம் முற்றிலும் எரிந்து நாசம்: 53 பேர் பலி… 270 வீடுகள் நாசம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 03:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், லைஹானா சுற்றுலாத் தலம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீவிபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமான சோகம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் தீவுகள் நிறைந்தது. பசிபிக் கடலில் இருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் இம்மாகாணத்தில் 8 தீவு நகரங்கள் இருக்கின்றன. இந்நகரங்களில் 2-வது பெரிய தீவு நகரம் மாய், இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நகரங்களுக்கும் தீ பரவியது. குறிப்பாக, புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான லைஹானா நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் முழுவதும் தீக்கிரையானது.

இதனால், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது. வானுயர எழுந்த கரும்புகையால் மாய் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

குறிப்பாக, சுற்றுலாத் தலமான லைஹானா நகரம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீயில் பலரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், தீயிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க விமானப்படையினரும், கடற்படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும், காட்டுத் தீ என்பதால், காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலும், தீயை அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக, மாய் தீவின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருப்தோடு, இணையதளச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகி இருப்பதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானதோடு, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாய் தீவுக்கும், லைஹானா நகருக்கும் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்களது நாட்டுக்கு திரும்புவதற்காக விமான நிலையங்களுக்கு விரைந்தனர். ஆனால், காட்டுத்தீயால் விமான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதால் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். தீவை விட்டு வெளியேறும் வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது.

இதனிடையே, மாய் தீவில் அவசர நிலைப் பிரகடணம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் தீவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயை பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். தவிர, மீட்புப் பணியில் இராணுவம் ஈடுபடும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

Tags: americaAmerica Fireamerica fire accident
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசாவின் அதிவேக பெரிய துறைமுகம் பாரதீப் துறைமுகம்!

Next Post

மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு !

Related News

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

ஓமன் மீது தாக்குதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

பாஜகவில் புதிய தேசிய பொறுப்பாளர்கள் நியமனம்; பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன் உள்ளிட்டோருக்கு 3 ஆண்டுகள் சிறை உறுதி – சென்னை உயர் நீதிமன்றம்

மேகமலை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு – பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் உறுதி!

பள்ளிகளில் விளையாட்டை அடிப்படை உரிமையாக்க வேண்டும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சீரற்ற மின் விநியோகம் – பொதுமக்கள் புகார்!

போதைப்பொருள் புழக்கம் எந்த ஆட்சியில் அதிகரித்தது – சட்டசபையில் காரசார விவாதம்!

கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை திசை திருப்ப வேண்டாம் – அமைச்சர் நிர்மல்குமார்

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் – பணிகள் தீவிரம்!

காஞ்சிபுரத்தில் அரவைக்கு அனுப்பப்பட்ட 1,500 டன் நெல் மூட்டைகள் மாயம் – 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – ஐ.பி.எஸ் அதிகாரியின் சகோதரருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்!

ஆகஸ்ட் 28 முதல் தொடர் வேலை நிறுத்தம் – டாஸ்மாக் தொழிற்சங்கள் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies