அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!
Jul 18, 2026, 07:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!

லைஹானா சுற்றுலா நகரம் முற்றிலும் எரிந்து நாசம்: 53 பேர் பலி… 270 வீடுகள் நாசம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 11, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், லைஹானா சுற்றுலாத் தலம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீவிபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமான சோகம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் தீவுகள் நிறைந்தது. பசிபிக் கடலில் இருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் இம்மாகாணத்தில் 8 தீவு நகரங்கள் இருக்கின்றன. இந்நகரங்களில் 2-வது பெரிய தீவு நகரம் மாய், இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நகரங்களுக்கும் தீ பரவியது. குறிப்பாக, புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான லைஹானா நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் முழுவதும் தீக்கிரையானது.

இதனால், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது. வானுயர எழுந்த கரும்புகையால் மாய் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

குறிப்பாக, சுற்றுலாத் தலமான லைஹானா நகரம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீயில் பலரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், தீயிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க விமானப்படையினரும், கடற்படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும், காட்டுத் தீ என்பதால், காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலும், தீயை அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக, மாய் தீவின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருப்தோடு, இணையதளச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகி இருப்பதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானதோடு, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாய் தீவுக்கும், லைஹானா நகருக்கும் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்களது நாட்டுக்கு திரும்புவதற்காக விமான நிலையங்களுக்கு விரைந்தனர். ஆனால், காட்டுத்தீயால் விமான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதால் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். தீவை விட்டு வெளியேறும் வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது.

இதனிடையே, மாய் தீவில் அவசர நிலைப் பிரகடணம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் தீவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயை பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். தவிர, மீட்புப் பணியில் இராணுவம் ஈடுபடும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

Tags: americaAmerica Fireamerica fire accident
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவின் அதிவேக பெரிய துறைமுகம் பாரதீப் துறைமுகம்!

Next Post

மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு !

Related News

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies