அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!
Jul 6, 2025, 12:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் காட்டுத்தீ!

லைஹானா சுற்றுலா நகரம் முற்றிலும் எரிந்து நாசம்: 53 பேர் பலி… 270 வீடுகள் நாசம்

Web Desk by Web Desk
Aug 11, 2023, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில், லைஹானா சுற்றுலாத் தலம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீவிபத்தில் 53 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமான சோகம் அரங்கேறி இருக்கிறது.

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் தீவுகள் நிறைந்தது. பசிபிக் கடலில் இருந்து 2,000 மைல் தொலைவில் அமைந்திருக்கும் இம்மாகாணத்தில் 8 தீவு நகரங்கள் இருக்கின்றன. இந்நகரங்களில் 2-வது பெரிய தீவு நகரம் மாய், இங்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு காட்டுத் தீ பரவியது. காற்றின் வேகத்தால் அருகிலுள்ள நகரங்களுக்கும் தீ பரவியது. குறிப்பாக, புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான லைஹானா நகரில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், கட்டடங்கள் முழுவதும் தீக்கிரையானது.

இதனால், எங்கு பார்த்தாலும் தீப்பிழம்பாக காட்சியளித்தது. வானுயர எழுந்த கரும்புகையால் மாய் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

குறிப்பாக, சுற்றுலாத் தலமான லைஹானா நகரம் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இத்தீயில் பலரும் உடல் கருகி உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும், தீயிலிருந்து தப்பிக்க கடலில் குதித்தவர்களில் பலர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தீயணைப்பு வீரர்களும், அமெரிக்க விமானப்படையினரும், கடற்படையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும், காட்டுத் தீ என்பதால், காற்றின் வேகம் அதிகம் இருந்ததாலும், தீயை அணைப்பதில் பெரும் சவால் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். தீ விபத்து காரணமாக, மாய் தீவின் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டிருப்தோடு, இணையதளச் சேவையும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகி இருப்பதாகவும், ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 270-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானதோடு, ஏராளமான வீடுகள் பலத்த சேதமடைந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும், இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாய் தீவுக்கும், லைஹானா நகருக்கும் சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பயணிகள் தங்களது நாட்டுக்கு திரும்புவதற்காக விமான நிலையங்களுக்கு விரைந்தனர். ஆனால், காட்டுத்தீயால் விமான சேவையும் நிறுத்தப்பட்டிருப்பதால் விமான நிலையத்தில் சுற்றுலாப் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். தீவை விட்டு வெளியேறும் வரை ஆயிரக்கணக்கான மக்களுக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் அடைக்கலம் கொடுத்திருக்கிறது.

இதனிடையே, மாய் தீவில் அவசர நிலைப் பிரகடணம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹவாய் தீவில் ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயை பேரழிவு என்று அறிவித்திருக்கிறார். தவிர, மீட்புப் பணியில் இராணுவம் ஈடுபடும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.

Tags: america fire accidentamericaAmerica Fire
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவின் அதிவேக பெரிய துறைமுகம் பாரதீப் துறைமுகம்!

Next Post

மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு !

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies