அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!
Jul 29, 2026, 07:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டத்தில் உள்ள 20 காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகியுள்ளது. சிசிடிவி கேமிராக்கள் இல்லாததே காவல் மரணங்களுக்கு அடிப்படை காரணமாகக் கூறப்படும் நிலையில்,  அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறியுள்ளன. விசாரணை எனும் பெயரில் கண்ணியமற்ற முறையிலும், காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறை மீதும் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற காவல் மரணங்கள் நிகழக்கூடாது என்பதற்காகக் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காவல்நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மொத்தமாக 25 காவல்நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் 20 காவல்நிலையங்களில் காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் சிசிடிவி கேமிராக்கள் இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி மீது காவல்நிலையத்தில் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி அராஜகமாக நடந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது தான் அத்துமீறியதாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுங்கள் எனக் கோரிய போது போலீசார் மறுத்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாகக் காவல்நிலையங்களில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் தொடர்பாக அறிந்து கொள்ள தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கிடைத்த பதிலில் பெரும்பாலான காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோவை மாவட்ட காவல்நிலையங்கள் மீது புகார் எழுந்துள்ளன. காவல்நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் இல்லாததே காவலர்களின் அத்துமீறலுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படும் நிலையில், காவல்நிலையங்களில் சிசிடிவி கேமிராக்களை கட்டாயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: அதிர்ச்சியூட்டும் RTIசிசிடிவி கேமிராக்கள்police stationcctvtn policeShocking RTI: Police stations without CCTVசிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

Next Post

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies