சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா என தொடர் விடுமுறை காரணமாக, பணி முடித்து சொந்த ஊர் திரும்ப அரியலூர் பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.
வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகள் உரிய நேரத்தில் வராததால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதேபோல் பெரம்பலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாமல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தொடர் விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் நிலை ஏற்பட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
பெரம்பலூரில் இருந்து கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















