தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை - பொதுமக்கள் அவதி!
Sep 11, 2026, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 11, 2026, 01:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தேனி மாவட்டம், கண்டமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடரும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கண்டமனூர், கணேசபுரம், வேலாயுதபுரம், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரங்களில் விட்டு விட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்தடை பிரச்னையை உடனடியாக சரிசெய்யாவிட்டால், கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அய்யர்மலை, பணிக்கம்பட்டி, நச்சலூர், கொசூர், பஞ்சப்பட்டி, வல்லம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு நேரங்களில் 4 முதல் 6 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சென்ற போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மின்வெட்டு நீடிப்பதால், பள்ளி மாணவர்கள் செல்போன் வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே விக்கிரமசிங்கபுரம் பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் தொடர் மின்வெட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைவிளைப்பட்டி, தெற்கு அகஸ்தியர்புரம், உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்தடையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலை அடிவாரப் பகுதியாக இருப்பதால், இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், மின்வெட்டால் அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மின்வாரியத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

Tags: Karur DistrictKrishnarayapuram constituenciesPanikkampattiNachalurKosurPanchapattiTamil Nadupower cutkulithalaiVallam
Share
Tweet
SendShare
Previous Post

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Related News

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

இலங்கை நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் ராஜ்நாத்சிங் சாமி தரிசனம்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் புதின் – விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் லண்டன் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

கூடலூர் அருகே ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணி தீவிரம்!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies