சென்னை மாநகரில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களைத் தொடர்ந்து, ரவுடிகளை கைது செய்யும் வகையில் “ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கையை மாநகர காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவின் ஒருபகுதியாக, முன்விரோதம் கொண்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாதவர்களையும் கைது செய்து வருகின்றனர். இதுவரை 70-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு, கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
















