விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் சிலைகள் வழங்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பக்தர்கள் அனைவருக்கும் காப்பு கட்டி விரதத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து முன்னணி சிறப்பாக கொண்டாட உள்ளதாகவும், அரசு சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சரின் செயல் பாராட்டிற்குரியது என தெரிவித்த அவர், அரசு சார்பில் விநாயகர் சிலைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
















