தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒருபகுதியாக
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டனுக்கு புறப்பட்டு சென்றார்.
அங்கு நடிகர் அஜித்குமாரின் கார் பந்தயத்தை முதலமைச்சர் பார்வையிட இருப்பதாகக் கூறப்படுகிறது. லண்டனில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்து முதலமைச்சர் விஜய் கலந்துரையாட உள்ளார். லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, துபாய் வழியாகச் செப்டம்பர் 17-ம் தேதி முதலமைச்சர் சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
















