அரசு முறைப் பயணமாக லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனுக்கு 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்பட்டு சென்றார். ஹீத்ரோ விமான நிலையத்தில் கூடியிருந்த பிரிட்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
லண்டனில் 6 நாட்கள் தங்கியிருக்கும் முதலமைச்சர், முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும், ‘சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்’-ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தையும் தொடங்கிவைக்கவுள்ளார்.
















