பிரிக்ஸ் மாநாட்டையொட்டி டெல்லி வந்த ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.
அமெரிக்கா, ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூறு டாலரை கடந்த நிலையில், தலைவர்கள் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மேற்காசியா போருக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஏற்கெனவே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிஷ்கெக்கில் இருவரும் சந்தித்துப் பேசிய நிலையில், மீண்டும் ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி,
தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
















