விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தாம்பரம் GST சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செப்டம்பர் 11 முதல் 14-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செப்டம்பர் 13-ம் தேதி முகூர்த்த நாளும், 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தியும் வருவதால் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்க சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் 500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அரியலூரில் போதிய பேருந்து வசதி இல்லாததால், சொற்ப அளவில் இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துச் செல்லும் நிலை ஏற்பட்டது.
















