தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பொதுமக்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி வரும் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சட்டப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பின்கீழ் இந்த நடைமுறை அமலுக்கு வரவிருக்கிறது.
இந்த புதிய முறையின் படி புதிய வாகனம் வாங்குவோர், அதற்கான பதிவை முடித்தவுடன் டிஜிட்டல் பதிவு சான்றிதழை இணையம் வழியாக நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு முடிந்த அன்றைய தினமே, ஓட்டுநர் உரிமம் டிஜிட்டல் முறையில் தரப்படும்.
டிஜிட்டல் ஆவணங்களில் உள்ள க்யூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வழியாக அரசு அலுவலகங்கள், அதிகாரப்பூர்வ அமைப்புகள் மின்னணு முறையில் ஆவணங்களை மிகவும் எளிதாக சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இந்த டிஜிட்டல் சான்றிதழ்களை ஓராண்டுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
அனைத்து டிஜிட்டல் ஆவணங்களிலும் ஒரு க்யூஆர் குறியீடு இடம்பெற்று இருக்கும். அதை பயன்படுத்தி அதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
















