உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!
Sep 10, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை  இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் லோராவின் சிறப்பம்சங்கள் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த 11 ஆண்டுகளாகவே,இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புக்களை நவீனப் படுத்தி வருகிறது. சுயச் சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், பல்வேறு அதிநவீன ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புக்களை இந்தியா முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.

மேலும், ரஷ்யா,அமெரிக்கா,பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது. குறிப்பாக, இஸ்ரேலின் மொத்த ஆயுத ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 41 சதவீதம் ஆகும். இஸ்ரேல் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது.

இந்தச் சூழலில், சீனா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சியில் இந்தியா, இஸ்ரேலின் அதிநவீன சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. 2023ம் ஆண்டில், மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் Israel Aerospace Industries ஆகிய நிறுவனங்கள்,  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் , இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), இந்திய முப்படைகளுக்கும் ஏற்றவாறு, AIR LORA  வை உள்ளூரில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் ஆயுதப் படைகளை அதிநவீன குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவுக்குப் பலமாக அமையும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப பரிமாற்றத்தை உறுதி செய்யும் இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத்  துறையில் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான அடித்தளம் என்று Indian Defence Research Wing கூறியுள்ளது.

ஏற்கெனவே இஸ்ரேல் வான்வழி பாலிஸ்டிக் ஏவுகணையான IMI Rampage என்று ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானின் விமானத் தளங்களை  Rampage  ரேம்பேஜ் ஏவுகணையைப் பயன்படுத்தி இந்திய விமானப்படை தாக்கி சாதனை படைத்தது.

250 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும்  Rampage ரேம்பேஜ் ஏவுகணையை விடவும் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, 400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் இஸ்ரேலின் AIR LORA  சூப்பர் சோனிக் ஏவுகணைகளை வாங்க இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AIR LORA  நீண்ட தூரப் பீரங்கி மூலம் வான்வழியாக ஏவப்படும் ரக ஏவுகணையாகும்.  ஒரு நீண்ட தூர வான்-தரை ஏவுகணை (AGM)  ஆகும். இந்த Stand Off  Air-to-Surface ஏவுகணையை Israel Aerospace Industries  நிறுவனம் தயாரித்துள்ளது.

AIR LORA  ஒரு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை (SRBM) ஆகும். முதன்மையாக மொபைல் லாஞ்சர்களிலிருந்து தரையில் ஏவுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கடலில் இருந்தும்  ஏவப்படும் வகையில் மேம்படுத்தப் பட்டுள்ளது. 1,600 கிலோ ஏவுதல் எடையுடன், ஏவுகணையை இந்தியாவின் Su-30MKI விமானங்களிலிருந்தும்  செலுத்த முடியும் என்று கூறப்படுகிறது. மேலும்  F-16,  P-8 என அனைத்து போர் விமானங்களிலும் இந்த ஏவுகணையைப் பொறுத்த முடியும்.

கட்டளை மையங்கள், விமானப்படைத் தளங்கள், உள்கட்டமைப்பு மற்றும் அடர்த்தியான கடற்கரை சூழல்களில் கடற்படைக் கப்பல்கள் போன்ற உயர் மதிப்புள்ள மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட இலக்குகளுக்கு எதிராகத் துல்லியமான தாக்குதல் நடத்த உருவாக்கப் பட்ட ஏவுகணையாகும்.

சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் AIR LORA , ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இலக்குகளைத் தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். 10 மீட்டருக்கும் குறைவான Circular error probable (CEP) கொண்டுள்ளதால், இந்த ஏவுகணையால், குறைந்தபட்ச இணை சேதத்துடன் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

பல்வேறு வகையான வலுவான போர்முனைகளைக் கொண்ட AIR LORA, எதிரிகளின் வான் பாதுகாப்புக்கு எட்டாத தூரத்திலிருந்து, எதிரியின்  இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும். GPS சிக்னல்கள் மறுக்கப்படும் சூழல்களில் கூட துல்லியமாக இலக்கைத் தாக்கும் திறன் உடையதாகும்.  90 டிகிரி தாக்குதல் கோணம் என்பதால் இந்த ஏவுகணையின் வெற்றி விகிதம் 100 சதவீதமாக உள்ளது.

இரவும், பகலும் மற்றும் அனைத்து வானிலையிலும் செயல்படும் இந்த ஏவுகணை, fire-and-forget missile system ஆகும். AIR LORA என்பது ஏவப்பட்ட பிறகு, மற்ற வழிகாட்டுதல்கள் தேவையில்லை. மேலும்  AIR LORA அதன் இலக்கு ஒருங்கிணைப்புகளை விமானத்தின் நடுவில் மாற்ற முடியும். இது போர்க்கள சூழ்நிலைகளில் அதிரடி மாற்றங்களை உருவாக்க உதவுகிறது.

வெடிமருந்துகள்,வெடிகுண்டுகள்,அணுஆயுதம் என பல்வேறு நோக்கங்களுக்கான பல்வேறு வகையான போர்முனைகளுடன் இந்த ஏவுகணையைப் பொறுத்த முடியும் என்பது AIR LORA வின் சிறப்பம்சமாகும். எல்லைகளில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் பாதுகாப்புக்காக இந்திய விமானப்படை மேலும், மேலும் வல்லமை மிக்கதாக வளர்ந்து வருகிறது.

Tags: இந்தியாIndia to manufacture domestically: Israel's AIR LORA supersonic missileசூப்பர்சோனிக் ஏவுகணைஇஸ்ரேலின் AIR LORAIndiaIsraelNEWS TODAYtoday news
Share
Tweet
SendShare
Previous Post

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies