முதல்வர், பிரதமர் என அரசு பதவிகளில் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக, வரும் 17ம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்குவதாக பாஜகவின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி அரசு பதவிகளில் 25 ஆண்டு பதவி வகித்து வருவதாக என குறிப்பிட்டார்.
இதனை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு ‘சேவா சங்கல்ப அபியான்’ இயக்கம் துவங்கப்படும் என அறிவித்தார்.
















