சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதலமைச்சர் பதிவு செய்தது ஏன் என்பது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் நடத்தலாம் ரத்தீஷ் என்ற தனிப்பட்ட நபரோ மாப்பிள்ளை உடன் இருக்கும் நண்பர்களோ நடத்தக்கூடாது என தெரிவித்தார்.‘
ரதீஷ் என்பவருக்கு அரசியலும் தெரியாது மக்களைப் பற்றியும் தெரியாது என்றும், மாப்பிள்ளை உடன் இருக்கும் 10 பேரும், மகனுடன் இருக்கும் 10 பேரும் அரசை நடத்தி உள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறையோடு உள்ள சிஸ்டங்களை மாற்றுகிறோம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்றும், “முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுவிட்டது என்றும், லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
“புரையோடு இருந்த மரத்தை சாய்த்து விட்டு புது செடியை வளர்த்து வருகிறோம் என்றும், “ஒவ்வொரு நாளும் கண்ணும் கருத்துமாக மக்களுக்கு செய்ய வேண்டியதை முதலமைச்சர் செய்கிறார் என்றும் நிர்மல் குமார் குறிப்பிட்டார்.
















