கடந்த ஆட்சியாளர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற வானதி சீனிவாசன், மத்திய அரசு திட்டங்களுக்கான தொழில் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவை நேரலை தொடர்ந்து ஒளிபரப்பப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், ஆக்கப்பூர்வமான விஷயங்களை மட்டுமே பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, திமுகவினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முதலமைச்சர் விஜய், ஆட்சியமைத்து 100 நாட்களைக் கடந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
















