அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமானை வேட்பாளராக முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியினர் இடைத்தேர்தல் களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் களப்பணிகளை நாம் தமிழர் கட்சியினர் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்தச் சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட கங்கனாங்குளம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் வெற்றி பெறுவதற்காக அனைத்து நிர்வாகிகளும் முழு வீச்சில் களப்பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
















