பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
துறை வாரியான முன்னேற்றம், அமைச்சர்களின் செயல்திறன் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்களது அமைச்சகங்களின் செயல்திறன் அறிக்கைகளுடன் பங்கேற்கின்றனர். கல்வி, விவசாயம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிகிறது. அரசு அறிவித்த மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலவரம், இலக்குகள் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்திறன் குறித்தும் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
















