உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யப் படைகள் மீண்டும் சரமாரி பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அமெரிக்க அமைதித் தூதர்கள் புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்தத் தீவிரத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ரஷ்யாவின் இந்தத் திடீர் ஏவுகணைத் தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்; குடியிருப்பு வளாகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் பலத்த சேதமடைந்து தீப்பற்றி எரிந்தன. வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் நிலத்தடிப் பதுங்கு குழிகளில் அவசர அவசரமாகத் தஞ்சம் புகுந்தனர்.
















