நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!
Sep 14, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீட் தேர்வு விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 08:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழக அரசின் சட்ட மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் தற்போது நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு மாநிலத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறி, மறுப்புத் தெரிவித்து விட்டது. இதையடுத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், அந்த மசோதாவைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து விட்டார்.

இந்த நிலையில், சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் “எண்ணித் துணிக” என்கிற தலைப்பில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது, சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரின் தந்தை எழுந்து, “தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுகின்றனர். அதிக மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள். எனினும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே, தமிழக அரசின் நீட் தேர்வு மசோதாவுக்கு எப்போது விலக்கு அளிப்பீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஆளுநர் ரவி, “நீட் தேர்வுக்குத் தடை கோருவதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்துப் போட மாட்டேன்.

மேலும், இந்த விவகாரம் பொதுப் பட்டியலில் இருப்பதால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை, பயிற்சி மையங்களுக்குச் சென்றுதான் வெற்றிபெற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பள்ளியில் படிக்கும்போதே ஆழமாகக் கவனித்துப் படித்தால் நீட் தேர்வில் வெற்றிபெறலாம். அதோடு, ஒவ்வொரு முறையும் நீட் தேர்வுக்கு விலக்கு கோருவது மாணவர்களின் கற்றல் திறனையே கேள்விக்குறியாக்கிவிடும். அதேபோல், நீட் தேர்வுக் குழு அறிக்கையின்படி பார்த்தால், நீட் தேர்வு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. ஆகவே, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன்” என்று உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.

Tags: governor raviRN Ravi
Share
Tweet
SendShare
Previous Post

இன்று உலக யானைகள் தினம் 2023

Next Post

2047-க்கு முன் இந்தியா வளர்ச்சி அடையும்- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திட்டவட்டம்

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies