வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில்,
இன்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், பாண்டிய மன்னர்களின் அரசவைப் புலவராகவும், அகத்திய மாமுனிவரின் முதன்மைச் சீடராகவும் விளங்கிய அதங்கோட்டாசான் பிறந்த புண்ணிய பூமியான குமரி மாவட்டத்தில், கிள்ளியூர் பகுதியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது பேரன்பு கொண்ட மக்கள் சூழ சிறப்பாக நடந்தேறியது.
கர்மவீரர் காமராஜரும், மக்கள் பணிக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த ஐயா பொன்னப்ப நாடாரும் அரசியல் செய்த மண் இன்று, மக்கள் பணி என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களால் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
செண்பகவல்லி அணை, முல்லைப் பெரியாறு அணை, நெய்யாறு அணை என்று தமிழக உரிமை அனைத்தையும் அடகு வைத்துள்ளது திமுக அரசு. காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நெய்யாறு இடதுகரை கால்வாய், இன்று நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது. சட்டசபையில் திமுகவிடம் இதை பற்றி கேள்வி எழுப்பினால், தண்ணீர் வராத கால்வாயை சுத்தம் செய்தால் என்ன என்று பேசியுள்ளார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். டாஸ்மாக் போதும் என்றிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். 1971 ஆம் ஆண்டு, மதுவிலக்குக்காகப் போராடிய 33,000 பேரைக் கைது செய்த கருணாநிதியின் மகன் தானே. வேறு எப்படி இருப்பார்?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில், குமரி கிராம்பும், மார்த்தாண்டம் தேனும், மட்டி வாழைப் பழமும் புவிசார் குறியீடு பெற்றுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளைபொருட்கள் உலகத்தில் அனைத்து இடத்திற்கும் செல்லவேண்டும் என்பதே நமது பாரத பிரதமரின் ஆசை.
மோடியின் முகவரி : கிள்ளியூர்
மத்திய அரசின் Startup India திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரான திருமதி சுசீலா, பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு. பால்மணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி. சாந்தினி, இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நேரு யுவ கேந்திரா சங்கதன் திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு ராஜேஷ், உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம் பலனடைந்த திரு. மணிகண்டன். இவர்கள்தான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முகவரி.
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரை உச்சரிக்க கூட தகுதி இல்லாத மனிதர் இந்த மலை முழுங்கி மனோ தங்கராஜ் .மத்திய அரசு தமிழகத்தின் மீனவர்களின் நலனுக்காக வழங்கும் நிதி எங்கே செல்கிறது? கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் 600 லாரியில் குமரி மாவட்டத்தின் வளங்கள் சூறையாடப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால் தேங்காப்பட்டினம் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு பணிகளுக்கு போதிய கல் அனுப்பாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த துறைமுகத்தின் முகத்துவாரத்தில் கடல் அலையால் ஏற்படும் மணல் திட்டுகளில் சிக்கி இதுவரை 50 க்கும் மேற்பட்ட படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் எத்தனை உயிர் போகும் வரை இந்த ஊழல் திமுக அரசு காத்திருக்கும். மீனவர்களில் நலனில் துளி கூட இல்லாத அரசு இந்த ஊழல் திமுக அரசு.
மோடியின் முகவரி : கிள்ளியூர்
மத்திய அரசின் Startup India திட்டத்தின் மூலம் தொழில் முனைவோரான திருமதி சுசீலா, பிரதமரின் இலவச மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் பலனடைந்த திரு. பால்மணி, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு பெற்ற திருமதி. சாந்தினி, இளைஞர்களின் திறமைகளை… pic.twitter.com/WS6XUuR89d
— K.Annamalai (@annamalai_k) August 15, 2023
வரும் பாராளுமன்றத் தேர்தலில், சந்தர்ப்பவாத, ஊழல் திமுக காங்கிரஸ் கூட்டணியை தோற்கடித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க, குமரி மண்ணும் நிச்சயம் துணை நிற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.