வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!
Mar 22, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாஜ்பாய் நினைவு தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 16, 2023, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அடல் பிஹாரி வாய்பாய், மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் 1924-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி பிறந்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். இந்திய விடுதலைக்குப் பிறகு  நடந்த 2-வது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பாரதிய ஜனசங்க கட்சியின் மக்களவைத் தலைவராக 1957 முதல் 1977வரை இருந்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் 1977-ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

மேலும், 1980 முதல் 6 ஆண்டுகள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்தார். இது தவிர, இந்திய பிரதமராக 3 முறை பதவி வகித்தார். பா.ஜ.க.வின் முதல் பிரதமர் என்கிற பெயருமையைப்  பெற்றவர் வாஜ்பாய். எல்லாவற்றுக்கும் மேலாக, இவரது ஆட்சியின்போதுதான் கார்கில் போரில், பாகிஸ்தானை இந்திய இராணுவ வீரர்கள் விரட்டி அடித்தார்கள். வயது முதிர்வு காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு, தனது 93-வது வயதில், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.

இவரது 5-ம் ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், டெல்லியிலுள்ள வாஜ்பாயின் நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “பா.ஜ.கவிலிருந்து முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய், கட்சியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். மேலும், 6 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியை சிறப்பாக நடத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார். வாஜ்பாய் காலத்தில் நாடு பெரிதும் பயனடைந்திருக்கிறது. 21-ம் நூற்றாண்டில் நாட்டை பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவர். இந்தியாவின் 140 கோடி மக்களுடன் சேர்ந்து இன்று நான் அவருக்கு மரியாதை செய்கிறேன்” என்றார்.

அதேபோல, வாஜ்பாயின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை நாடு முழுவதும் இருக்கும் பா.ஜ.க.வினர் அனுஷ்டிக்குமாறு, கட்சித் தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அப்போது, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், அவற்றில் தற்போதுவரை நீடித்திருக்கும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், இந்த நினைவுதினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது.

Tags: PM Modiatal bihari vajpayeevajpayeePM atal bihari vajpayee
ShareTweetSendShare
Previous Post

திடீரென 15,000 அடி கீழே இறங்கிய விமானம்: பயணிகள் கடும் அதிர்ச்சி!

Next Post

மீனவர்கள் நலனில் ஊழல் திமுக அரசுக்கு அக்கறை கிடையாது!- அண்ணாமலை

Related News

டெல்லி என்றாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடுக்கம் – நயினார் நாகேந்திரன்

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த அரசாங்கத் தலைவர் பிரதமர் மோடி – அண்ணாமலை புகழாரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றம்!

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமிழக வாழ்வுரிமை கட்சி – அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் வேல்முருகன்!

செஞ்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஸ்டாலின் படம் – என்டிஏ கூட்டணி மறியல்!

திருப்பத்தூர் அருகே ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 4.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஹர்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தல்!

48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

தமிழக சட்டமன்ற தேர்தல் – அதிமுக கூட்டணிக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு!

சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் ஆணை – முன்னாள் அதிகாரிகள் கண்டனம்!

ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் – ரஷ்யாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த கப்பல்!

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை கைவிட வேண்டும் – கிரண் ரிஜிஜூ

கரூரில் வாக்காளர்களை அடைக்க கூடாரங்கள் – தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

தொகுதிகளை குறைத்தால் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் – மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் ஆவேசம்!

புதுச்சேரியில் முக்கிய தொகுதிகளை ஒதுக்க திமுக நிர்பந்தம் – கிரிஷ் சோடங்கர் அதிருப்தி!

ரூ. 21 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் – வேட்பு மனுவில் புதுச்சேரி முதலவர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies