தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவில் இருகிறது. இந்நிலையில் ஒரு சில தினங்களாக நீர் வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, டெல்டா பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டது.
தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து, அதிகமானதால், 552 கன அடியிலிருந்து 3,260 கன அடியாக அதிகரித்து உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.19 அடியாகவும், நீர் இருப்பு 20. 55 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு 3,260 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், பாசனத்திற்காக நேற்று 6000 கன அடி நீர்திறக்கப்பட்ட நிலையில் இன்று டெல்டா பாசனத்திற்கு 8000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.