விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தா!
Aug 6, 2025, 12:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகாக வாழ்ந்த நல்லாண்டித் தாத்தா!

Web Desk by Web Desk
Sep 1, 2023, 05:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் 2021-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது  கடைசி விவசாயி’ திரைப்படத்திற்குஅறிவிக்கப்பட்டுள்ளது. துரதிஷ்டவசமாக, இப்படம் வெளிவரும் முன்பே , நல்லதாண்டி உயிரிழந்துவிட்டார் என்பதால் விருதுக்கான “சிறப்பு பிரிவில் ” நலத்தாண்டி பெயர் சேர்க்கப்பட்டது.

காக்க முட்டை, ஆண்டவன் கட்டளை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் விவசாயிகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்தார். அதற்கு, கடைசி விவசாயி என்று பெயரிட்டார்.  மணிகண்டன் கடைசி விவசாயி என்ற படத்தை இயக்க 2016 ஆம் ஆண்டே தொடங்கினார்.

அதன் பின் படத்தை தயாரிப்பதற்காக தயாரிப்பாளரை தேடி அலைந்தார் மணிகண்டன். இறுதியில் அவரே இப்படத்தை தயாரிச்சார். இப்படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை மணிகண்டன் அணுகினாராம். ஆனால் அதுவும் நடக்கவில்லையாம்.

இப்படத்தில் நடிகர்கள் நடித்தால் சரியாக இருக்காது என எண்ணியே மணிகண்டன் நிஜமான விவசாயிகளையே நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார். இதையடுத்து பல கிராமங்களை சுற்றி திரிந்தார் மணிகண்டன். கிட்டத்தட்ட நூறு கிராமங்களுக்கு மேல் மணிகண்டன் இப்படத்தின் லொகேஷனுக்காகவும், நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் அலைந்தாா். இதற்கு மட்டும் மணிகண்டன் ஒரு வருடம் எடுத்துக்கொண்டார்.

ஒரு வழியா உசிலம்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பெருங்காமநல்லூர் கிராமம், அங்குதான் நல்லாண்டி தாத்தா கடைசி மூச்சு வரை வாழ்ந்திருக்கிறார்.

`எம்புட்டு பெரிய வேலையா இருந்தாலும் விவசாயத்துக்குதான் முக்கிய இடம் ‘அப்படீன்னு நெசமாவே விவசாயத்தில் ஆழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர், நல்லாண்டி தாத்தா. விவசாயத்தில் கிடைக்கப்பெறும் குறைவான ஊதியத்திலும். ஐந்து பிள்ளைகள், பேரன், பேத்தி என மகிழ்வுடன் வாழ்ந்திருக்கிறார். அது மட்டுமின்றி தாத்தாவுக்கு ஆடு,மாடு,கோழிகள் மீது அலாதி பிரியம். அவரின் இயல்வு வாழ்க்கையின் திரைவெளிச்சம்தான் ‘கடைசி விவசாயி’.

இது குறித்து அவரது மகன் “அவரை திரையில் பார்த்தப்போ கண்ணீர் வந்துருச்சு. எங்கப்பா எப்படி இருந்தாரோ, எப்படி வாழ்ந்தாரோ, அதை அப்படியே படம் புடிச்சிருக்காங்க. படத்துல வர்றமாரி அவருண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பாரு. வேற எந்த விஷயத்துலயும் தலையிட மாட்டாரு. விவசாயம் செய்யுறது, ஊர் மந்தையில உக்காந்து மனுஷ மக்களைக் கவனிக்கிறது, வீட்டுக்கு வந்து உறங்குறது இதுதான் அவரோட தினசரி வேலை. விடியுறதுக்கு முன்னால வயலுக்குப் போயிடுவாரு, மறுபடி எட்டு மணிக்கு வந்து இன்னைக்கு என்னென்ன வேலை செய்யணும், யாரு யாரு கூட வரணும்னு சொல்லுவாரு. அதோட நாங்களும் போயி வேலை பார்ப்போம்.

அங்கேயே வேலை பார்த்து சாப்ட்டுப்புட்டு சாயங்காலம் வீட்டுக்கு வருவோம். அதனாலதான் ஊருல யாருக்காவது பஞ்சாயத்துல கொழப்பம்னா அப்பாகிட்டே வந்து கேப்பாக. யாருக்கும் சாதக பாதகமில்லாமல் சரியான தீர்வைச் சொல்லிடுவாரு. மத்தவங்க என்ன நினைப்பாகளோன்னு நேர்மை தவற மாட்டாரு.

சினிமாவுல நடிக்கக் கூப்புடுறாகன்னு வந்து சொன்னப்போ முதல்ல ஒத்துக்கல. அப்புறம் வெவசாய வேலைய முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டாரு. தினமும் சூட்டிங்குக்குப் போவாரு, ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா கொடுப்பாங்க. அதை வாங்கிட்டு வந்து வீட்டுல கொடுப்பாரு. பேரன், பேத்திகளோட  விளையாடுவாரு. இப்படி ஓடியாடி இளவட்டம் மாதிரி இருந்தவரு, நோய் நொடின்னு படுத்ததில்லை. திடீர்னு எங்களை விட்டுப் போவாருன்னு நெனைக்கல. இந்தப் படம் வரும்போது அவர் இல்லாதது ரொம்ப வருத்தமாயிருக்கு” எனத் தொிவித்தார்.

 

 

 

 

 

Tags: cinemanews
ShareTweetSendShare
Previous Post

கருவறை குறும்படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது!

Next Post

‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ல் புது நாயகி!

Related News

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

Load More

அண்மைச் செய்திகள்

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

இன்றைய தங்கம் விலை!

சென்னையில் கோயிலில் லாக்கரை உடைத்து ரூ. 7 லட்சம் கொள்ளை!

கோவை அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி வர தாமதம் – தாயின் சடலத்தை காரில் எடுத்துச் சென்ற மகன்!

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies