இரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இன்று இலங்கையில் பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.
நேற்று மைதானத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தகவல் வந்த நிலையில் இன்று வானம் தெளிவாக உள்ளது என்று மைதானத்திலிருந்து தகவல் வந்துள்ளது.
இன்று காலை 9 மணி வானிலை அறிக்கையின் படி, வானம் 64% மேகம் சூழ்ந்ததாக காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் கூட அது தூறலாக தான் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்லேகலேவில் உள்ள உள்ளூர் இரசிகர்கள் வானம் தெளிவாக இருப்பதாகவும், இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற 99% வாய்ப்புள்ளதாகவும் இந்தியா வெற்றி பெறுவதை காண அவளாக உள்ளளோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.