ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் தேர்வு.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பல்லகெலேயில் இன்று நடக்கும் 5-வது லீக்கில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகிறது.
இரு அணியின் கேப்டன்கள் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா,விராட் கோலி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.
குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், பீம் ஷர்கி,ரோஹித் பவுடல்,குஷால் மல்லா,திபேந்திர சிங் ஐரி,குல்சன் ஜா,சோம்பால் கமி,சந்தீப் லமிச்சனே,கரண் கே.சி,லலித் ராஜ்பன்ஷி, ஆகிய வீரர்கள் நேபாளம் அணியில் உள்ளனர்.