ஜூனியர் அரசியல்வாதி: உதயநிதிக்கு மம்தா "குட்டு"!
Nov 11, 2025, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜூனியர் அரசியல்வாதி: உதயநிதிக்கு மம்தா “குட்டு”!

இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் இடம் உண்டு என்றும் பதிலடி!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 02:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலினை ஜூனியர் அரசியல்வாதி என்று  குறிப்பிட்டு குட்டு வைத்திருக்கும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தியாவில் அனைத்து மதங்களுக்கும் இடம் உண்டு என்றும் தெரிவித்திருக்கிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் (த.மு.எ.க.ச) நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் ஆகியவற்றைப் போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று கூறினார். இவரது பேச்சு நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் மற்றும் இந்து அமைப்பினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் உதயநிதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உதயநிதிக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “நான் தமிழ் மக்களையும், ஒட்டுமொத்த தென் மாநில மக்களையும், மு.க. ஸ்டாலினையும் மிகவும் மதிக்கிறேன். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் நான் வைக்கிறேன். இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. ஏராளமான மதங்களுக்கும், ஜாதிகளுக்கும் இந்தியாவில் இடம் இருக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஜனநாயக நாடு. அதனால், அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்புக் கொடுக்கிறேன்.

சனாதனத்தில் கடவுளுக்கு சேவை செய்யும் எத்தனையோ புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மதிப்பளிக்கிறேன். பெரும்பான்மை மக்களோ, சிறுபான்மை மக்களோ அவர்களின் உணர்வுகள் புண்படும்படி நாம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உதயநிதி ஒரு ஜூனியர் அரசியல்வாதியாக இருக்கிறார். அவருக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருக்கலாம். அவர் பேசியதை நானும் கேள்விப்பட்டேன். ஆனால், எந்த அர்த்தத்தில் அவர் அப்படி பேசினார் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அதுபோன்று அவர் பேசியிருக்கக் கூடாது. அனைத்து மதங்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே என் கருத்து” என்று கூறியிருக்கிறார்.

Tags: mamatha banerjiudhyanithi
ShareTweetSendShare
Previous Post

கனமழைக்கு வாய்ப்பு!

Next Post

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை !

Related News

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies