சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை !
Mar 15, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை 2023 நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானில் உள்ள கடாபி மைதானத்தில் நேற்று நடந்த 6 வது லீக் போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர், இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன் பின்னர் அணியின் ஸ்கோர் 121 ரன்களில் இருந்த போது அணியின் 4வது விக்கெட்டும் பறிபோக, அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கை அடைய வேண்டும் என்ற நிலையில் இருந்தது.

அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் அணியின் ரன்ரேட்டை முகமது நபி மற்றும் ஹஸ்மதுல்லா ஷாகிதி கூட்டணி மளமளவென உயர்த்தியது. குறிப்பாக அதிரடியாக ஆடிவந்த முகமது நபி 24 பந்துகளில் அதிவேகமாக அரைசதம் விளாசினார். 24 பந்துகளில் அரைசதம் விளாசியதால், முகமது நபி அதிவேகமாக அரை சதம் விளாசிய ஆஃப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமைப் பெற்றார்.

சிறப்பாக விளையாடி வந்த நபி, தீக்‌ஷனா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தனது விக்கெட்டை இழந்தார். இவர் 32 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 65 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் வந்த கரீம் ஜனட் ஷாகிதியுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் கிடைத்த பந்துகளைப் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தனர். ஆனால் இருவரும் இலங்கை அணியின் துனித் வீசிய 32வது ஓவரில் பந்தை தூக்கி அடிக்க முயன்று கேட்ச் ஆகி தங்களது விக்கெட்டை இழந்தனர். அடுத்தடுத்து ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி நெருக்கடிக்கு ஆளானது.

அதன் பின்னர் இணைந்த நஜிபுல்லா மற்றும் ரஷித்கான் கூட்டணி ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் என ஆஃப்கானிஸ்தான் அணியின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்ற வகையில் இருவரும் சிறப்பாக விளையாடினர். 36வது ஓவரில் நஜிபுல்லாவும், 38வது ஒவரின் முதல் பந்தில் ரஹ்மானும், மூன்றாவது பந்தில் ஃபரூக்கியும் தங்களது விக்கெட்டை இழக்க, 38.3 ஓவரில் ஆஃப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இலங்கை அணியின் சார்பில் ரஜிதா 4 விக்கெட்டுகளும், தனஞ்செயா மற்றும் துனித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Tags: asian cup cricketsrilanka cricket
ShareTweetSendShare
Previous Post

ஜூனியர் அரசியல்வாதி: உதயநிதிக்கு மம்தா “குட்டு”!

Next Post

ஜி 20 மாநாடு: ஜொலிக்குது டில்லி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies