ஒரே நாடு, ஒரே தேர்தல் – அன்றே சொன்னார் கருணாநிதி – அண்ணாமலை பரபரப்பு பேச்சு
Mar 15, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஒரே நாடு, ஒரே தேர்தல் – அன்றே சொன்னார் கருணாநிதி – அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு, ஒரே தேர்தலை, அன்றைய திமுக தலைவர் கருணாநிதியே வலியுறுத்தியுள்ளார் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

என் மண், என் மக்கள் 2-ம் கட்ட நடை பயணத்தை, , தென்காசியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக, கடையநல்லூரில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

அப்போது, பேசிய அவர், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வீடு புகுந்து 4 பேரை, சமூக விரோதிகள் வெட்டிப்படுகொலை செய்துள்ளனர். அதேபோல, திருநெல்வேலியில், பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. எல்லா இடத்திலும், தாராளமாகக் கிடைக்கிறது. பல இடங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லாமல், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால், தெருவுக்குத் தெரு, டாஸ்மாக் வைத்து, சாராயத்தை திமுக விற்பனை செய்து வருகிறது.

உதயநிதி என்பவர் ஒரு கத்துக்குட்டி. அவருக்குப் படிப்பறிவும் இல்லை, சொந்த அறிவும் இல்லை. உங்கள் தாத்தா கருணாநிதி, அந்த காலத்திலேயே, சனாதனம் குறித்துப் பேசி தோல்வி அடைந்தவர். வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் உங்களுக்கு உண்மை தெரியும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் தற்போதைய தேவைகளில் முக்கியமானது. தேர்தல் என்று வந்துவிட்டாலே, மாவட்ட ஆட்சியர் முதல் சாதாரணக் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருமே இரவு – பகல் பாராமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலையை நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம். இதை வலியுறுத்தித்தான், கடந்த 1971 -ம் ஆண்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நாட்டிற்குத் தேவை என, கருணாநிதியே குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, மறைந்த கருணாநிதி தனது சுயசரிதையான நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார். இதை முதல்வரும், அவரது மகனும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Tags: k annamali
ShareTweetSendShare
Previous Post

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!

Next Post

ககன்யான் திட்டத்தின் நோக்கம்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies