6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!
Oct 5, 2025, 05:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 6, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில், ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது, இந்த தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், அவர் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதி காலியானதானது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரது கை விரல்களிலும், அழியா மை வைக்கப்பட்டது. பிரச்சனை மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், மூடி சீலிடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பதிவான வாக்குப் பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் கோசி தொகுதியில் 50.30 சதவீதமும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்ரி தொகுதியில் 64.84 சதவீதமும், உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ் தொகுதியில் 55.44 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதியில் 76 சதவீதமும், கேளராவில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 73 சதவீதமும், திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags: bye electionindian election commission
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் – அன்றே சொன்னார் கருணாநிதி – அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Related News

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

வடலூரில் வள்ளலாரின் 202-வது அவதார திருநாள் – சிறப்பு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies