6 மாநிலங்களில் இடைத்தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

6 மாநிலங்களில் இடைத்தேர்தல் – விறுவிறு வாக்குப்பதிவு – முழு விவரம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 6, 2023, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

இதில், ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். தற்போது, இந்த தொகுதியில் பதிவான வாக்குப் பதிவு விவரங்களைத் தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மறைவால், அவர் போட்டியிட்ட புதுப்பள்ளி தொகுதி காலியானதானது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

மற்ற தொகுதிகளில் உள்ள உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது. இதனால், 6 மாநிலங்களில் 7 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.

இதனிடையே, இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும், செப்டம்பர் 5-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் செப்டம்பர் 8-ம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதில், திரிபுரா மாநிலத்தில் 2 தொகுதிகள், ஜார்க்கண்ட் மாநிலம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், பாஜக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒவ்வொரு தொகுதியிலும், ஆண்களும், பெண்களும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்களித்த அனைவரது கை விரல்களிலும், அழியா மை வைக்கப்பட்டது. பிரச்சனை மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்குகள் அனைத்தும், மூடி சீலிடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பதிவான வாக்குப் பதிவு சதவீதம் குறித்து தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி, உத்தரப் பிரதேசம் கோசி தொகுதியில் 50.30 சதவீதமும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் டும்ரி தொகுதியில் 64.84 சதவீதமும், உத்தரகண்ட் மாநிலம் பாகேஷ் தொகுதியில் 55.44 சதவீதமும், மேற்கு வங்கம் மாநிலம் துப்குரி தொகுதியில் 76 சதவீதமும், கேளராவில் உள்ள புதுப்பள்ளி தொகுதியில் 73 சதவீதமும், திரிபுரா மாநிலத்தில் உள்ள தன்புர் மற்றும் போக்ஸாநகர் தொகுதியில் 76 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் 8-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags: bye electionindian election commission
ShareTweetSendShare
Previous Post

உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!

Next Post

ஒரே நாடு, ஒரே தேர்தல் – அன்றே சொன்னார் கருணாநிதி – அண்ணாமலை பரபரப்பு பேச்சு

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies