அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான தடை நீக்க மசோதா!
Jan 14, 2026, 07:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்கா நாடாளுமன்றத்தில் இந்தியாவுக்கான தடை நீக்க மசோதா!

உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க முடிவு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு உயர் தொழில் நுட்பங்கள், சாதனங்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்தியா வந்திருக்கும் நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் இந்தியாவுக்கு உயா் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுவைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், சபையின் இந்தியக் குழுவின் துணைத் தலைவர் ஆன்டி பிரார் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

‘இந்தியாவுக்குத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கான சட்டம்’ என்ற பெயரிலான இந்த மசோதா இரு நாடுகளிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக உயா் தொழில்நுட்பத் திறன்கொண்ட கணினிகள், மின்னணு உபகரணங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய உதவுகிறது.

இதுகுறித்து, இரு நாடாளுமன்ற உறுப்பினா்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், “ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இந்தியாவில் உள்ள நிலையில், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த மசோதா அமெரிக்காவிலிருந்து உயர் தொழில்நுட்பக் கணினிகள் உள்ளிட்ட மின்னணு உபகரணங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடைகளை நீக்கும். இதன்மூலம் அமெரிக்க வா்த்தகத் துறையின் உரிமம் இல்லாமலேயே உயர் தொழில்நுட்பப் பொருட்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அனுமதிச் சட்டம் பிரிவு 1211-ன் கீழ், மூன்றாம் நிலை தகுதிப் பட்டியலில் உள்ள நாடுகளுக்கு உயர் தொழில்நுட்ப மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில், அமெரிக்க அரசின் அனுமதி பெற வேண்டும். இந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இப்பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இல்லை. இந்த நிலையில், இந்த மசோதா நிறைவேறினால், 3-ஆம் நிலை நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்க வழி ஏற்படும். இதன் மூலம் இந்தியாவால் உயர் தொழில் நுட்ப மின்னணு பொருட்களை அமெரிக்காவிடமிருந்து எளிதாக வாங்க முடியும்.

ShareTweetSendShare
Previous Post

தமிழகத்திற்கு மத்திய அரசு தாராளம்!

Next Post

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் தோல்வி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies